உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – கல்வி அமைச்சு
2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு சில தரப்பினரால் வதந்திகள் பரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed